டிசம்பர் மாத ராசி பலன் – துலாம்!!

394

thula

துல்லியமாகவும், துணிவாகவும் முடிவெடுக்கும் நீங்கள், வரம்பு மீறி பேசுவதை விரும்ப மாட்டீர்கள். பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பொருளை விலைபேசு மளவிற்கு சாதுர்யமானவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்து கொண்டு உங்களை ஏடாகூடமாகப் பேச வைத்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் நிற்பதால் இனி உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.

பாதகாதிபதியான சூரியன் 3ல் மறைவதால் திடீர் பணவரவு உண்டு. பாக்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தந்தை வழியில் வரவேண்டிய சொத்துகள் வந்து சேரும். ஆனால், உங்கள் ராசிக்கு 12ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். ஏழரைச் சனி நடைபெறுவதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

மீண்டும் பழைய பிரச்னைகளை சந்திக்க நேரிடுமோ என்ற ஒரு அச்சம் வரக்கூடும். குருபகவான் 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் தன்னம்பிக்கை உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகள், அரசியல் முக்கியப் புள்ளிகள் அறிமுகமாவார்கள்.

அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள்.பழைய வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். மாணவர்கள் வகுப்பறையில் அரட்டைப் பேச்சு வேண்டாம். விளையாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். படிப்பில் கூ டுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னிப் பெண்கள் உங்களுடைய ராசிநாதனான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் யதார்த்தமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். பெற்றோரின் அறிவுரையில் உண்மையிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். பல வழிகளில் பணம் வரும். உணவு, டெக்ஸ்டைல், வகைகளாலும் லாபம் வரும்.

பழைய கடன்களை சாமர்த்தியமாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களிடம் முக்கிய பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். இடமாற்றம் சாதகமாகும். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் கூடிவரும்.

கலைத்துறையினர் உங்களுடைய படைப்புகள் வெளியாகும். அரசியல்வாதிகளால் ஆதாய மடைவீர்கள். விவசாயிகள் வற்றிய கிணறு சுரக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை முடிப்பீர்கள். மகசூல் பெருகும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 20, 21, 22, 23, 30, 31
ஜனவரி : 1, 2, 3, 4, 7, 8, 10.

சந்திராஷ்டம தினங்கள் : டிசம்பர் 16, 17ம் திகதி நண்பகல் 12 மணி வரை மற்றும் ஜனவரி 11ம் திகதி காலை 9.30 மணி முதல் 12, 13ம் திகதி இரவு 7 மணி வரை எதிலும் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம் : அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.